Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th July 2024 13:48:43 Hours

வெளிசெல்லும் படையணி படைத் தளபதிக்கு இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி படையினரால் பிரியா விடை

இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியில் வெளிசெல்லும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு பனாகொட இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி தலைமையகத்தில் 2024 ஜூலை 11 அன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.

வெளிசெல்லும் படைத் தளபதி சிரேஷ்ட அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார், அதைத் தொடர்ந்து இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை கௌரவிக்கும் வகையில் நினைவுத்தூபிக்கு வெளிசெல்லும் படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

அதற்கமைய சிரேஷ்ட அதிகாரி, படையணியினர்களுடன் குழு படம் எடுத்துகொண்டதுடன் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்திலும் கலந்துகொண்டார்.

மாலையில் இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைவாக படையணி அதிகாரிகள் உணவகத்தில் பிரியாவிடை இராபோசணம் வழங்கப்பட்டது. பிரியாவிடை நிகழ்வில் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களின் துணைவியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.