Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2023 13:10:55 Hours

வெளிசெல்லும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதிக்கு கௌரவ மரியாதை

வெளிசெல்லும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு புதன்கிழமை (ஓகஸ்ட் 16) இலங்கை இராணுவத் தொண்டர் படையணி படையினரால் கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

இதன் போது நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து பிரதம பதவி நிலை அதிகாரி - இலங்கை இராணுவ ரைபிள் படையணி மற்றும் இலங்கை இராணுவ முன்னோடி படையணி ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் இராணுவ தொண்டர் படையணி படையலகுகளின் கட்டளை அதிகாரியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர், இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் வெளியேறும் தளபதியை வரவேற்று மரியாதை செலுத்தும் மேடைக்கு அழைத்துச் சென்றதை தொடர்ந்து இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் படையினர்களால் மரியாதை வழங்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, வெளியேறும் தளபதி படையினருக்கு உரையாற்றியதை தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்புக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இறுதியில், மேஜர் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சமீபத்திய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், இந் நிகழ்வின் போது பதவி விலகும் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதான வாயிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் வரிசையாக நின்றிருந்த அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் விடைபெறும் ஆரவாரங்களுக்கு மத்தியில் தளபதி புறப்பட்டுச் சென்றார்.

இராணுவத் தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.