Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th August 2021 14:00:50 Hours

விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் புதிய படைத் தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

கரந்தெனியவில் உள்ள இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் முதலாவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர திங்கட்கிழமை (16) கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.

இதன் போது புதிய தளபதிக்கு படைப்பிரிவின் நிலையத் தளபதி பந்துல லியனகே அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதுடன், தளபதி மத அனுட்டானங்களுக்கு மத்தியில் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வின் போது கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கு அவசியமான உரிய சுகாதார ஒழுங்கு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன.

விவசாய மற்றும் கால்நடை பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷா ராஜபக்ஷ, பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சில சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, இராணுவத் தலைமையகத்தின் பொது நிதி முகாமைத்துவ பணிப்பாளராகவும் நியமனம் வகிக்கின்றார்.