Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 18:20:02 Hours

விவசாயிகளுடன் இணைந்து சிப்பாயிகளால் கல்பே குளக்கட்டை தூய்மையாக்கும் பணிகள்

பெரும்போக காலத்தில் 400 ஏக்கர் விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் விநியோகிக்க கூடிய வகையிலும் 120 விவசாயக் குடும்பங்களின் அன்றாட நீர் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியதாகவும் ஹொரவ்பத்தனை - கல்பே அமைந்திருக்கும் 1300 மீற்றர் நீளமுள்ள குளக்கட்டை தூய்மைக்கும் பணிகளை விவசாயிகள் மற்றும் சிப்பாய்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்தனர்.

623 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் மெதகொட அவர்களின் வழிகாட்டலின் கீழ் 623 வது பிரிகேட்டின் 5 வது (தொ) கஜபா படையணி கட்டளை அதிகாரி மேஜர் தம்மிக்க ஹேரத் அவர்களின் மேற்பார்வையில் 5 வது (தொ) கஜபா படையணியின் சிப்பாய்களால் 35 விவசாயிகளுடன் இணைந்து இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.