27th October 2022 16:38:20 Hours
2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட சிறு மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இப்பாகமுவ, பெரியகடுநெலாவ பத்தல்கொட குளத்தை அண்மித்துள்ள வீதி புணரமைக்கும் பணியில் விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகத்தின் படையினர் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட சாலையில் வாகனங்களின் போக்குவரத்திற்கு இடையூறாகவும் அருகிலுள்ள வீடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் காணப்பட்டமை தொடர்பில் வீதி அதிகார சபையால் அறிவிக்கப்பட்டதனை அடுத்து படையினர் உடனடியாக மணல் மூட்டைகளை வைத்து பாதிக்கப்பட்ட பகுதியை சீர் செய்தனர்.
சுமார் 20 விஜயபாகு காலாட்படையணி படையினரை கொண்ட குழு, விஜயபாகு காலாட்படையணி தலைமையக அதிகாரிகளுடன் இணைந்து அவசரகால சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டதுடன், வாகனப் போக்குவரத்தை வழமைக்கு திருப்பினர்.