28th October 2019 15:31:43 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் பணி புரியும் 9 அதிகாரிகள் மற்றும் 308 படை வீரர்களுக்கு ‘பூடோ’ தற்பாதுகாப்பு பயிற்சிகள் இம் மாதம் (28) ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த ஆரம்ப நிகழ்வானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
‘பூடோ’ தற்பாதுகாப்பு தலைமை பயிற்சிவிப்பாளரான திரு. க்லேமன்ட் டி சில்வா அவர்களின் தலைமையில் இந்த பயிற்சியானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Buy Kicks | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat