21st August 2021 10:00:36 Hours
மக்கள் வங்கி பௌத்த சங்கத்தின் நிதி அனுசரணையில் வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தின்17 (தொ) இலங்கை சிங்கப் படையினர் வியாழக்கிழமை ( 18 ) ஒரு ஏழை குடும்பத்திற்கான வீட்டை நிர்மாணிப்பதற்காக தங்களது தொழிற்துறை சிப்பாய்களின் ஒத்துழைப்பை வழங்கியது.
வவுனியா மூன்றுமுறிப்பு 214 கிராம சேவையாளர் பிரிவில் ஒர் ஏழை குடும்பத்திற்காக கட்டப்பட்ட புதிய வீட்டின் திறப்பு விழாவில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில மற்றும் 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏஎம்எஸ் பிரேமவன்ச ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மக்கள் வங்கி பொது முகாமையாளர் திரு ரஞ்சித் கொடித்துவக்கு திறப்பு விழாவில் கௌரவ அதிதியாக பங்கேற்றார். நன்கொடையாளர்களின் ஆதரவுடன் ஏழை மக்களுக்கு வீடு கட்டும் பணி இராணுவத்தின் சமூக சேவைகளின் ஒரு பகுதியாக பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவால் தொடங்கப்பட்டது.
நிகழ்வில் மக்கள் வங்கியின் சிரேஸ்ட பிரதி பொது முகாமையார் திரு மகிந்த பிரேமநாத், 17 வது (தொ) இலங்கை சிங்கப் படையின் கட்டளை அதிகாரி மேஜர் எச்கே குமாரசிறி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மக்கள் வங்கி பௌத்த சங்கத்தின் உறுப்பினர்களும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பங்கு கொண்டனர்.