05th October 2021 21:09:54 Hours
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க திங்கட்கிழமை (04) இடம்பெற்ற நிகழ்வின் போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்றைய நிகழ்வுகளின் முதல் அம்சமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு படைத் தலைமையக நுழைவு வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அவர் தலைமையக வளாகத்தில் உள்ள போர் வீரர்களின் நினைவு தூபிற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து 9 வது கஜபா படையணி சிப்பாய்களால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனைடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார். பின்னர் மாங்கன்று ஒன்றை நாட்டி வைத்த தளபதி அதிகாரிகளுக்கான விருந்தகத்தில் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு படையினருக்கான உரையொன்றையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள படைப்பிரிவு தளபதிகள் , முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தளபதி (வட மத்திய), பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் புதிதாக நியமனம் பெற்ற தளபதிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய நியமனத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு முன்னதாக 58 வது படைப்பிரிவு தளபதியாக நியமனம் வகித்திருந்தோடு, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.