Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2021 15:46:41 Hours

வன்னி அதிகாரிகள், சிப்பாய்களின் பங்கேற்புடன் புத்தாண்டு கொண்டாட்டம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தமிழ், சிங்கள புத்தாண்டு நிகழ்வுகள் சனிக்கிழமை (10) தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களால் வழங்கப்பட்ட வழிக்காட்டலுக்கமைய, இடம்பெற்ற வன்னி சூர்ய மங்கல்ய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் ஆண்டுக்கான ஆணழகன், அழகி போட்டிகள், பாரம்பரிய விளையாட்டு அம்சங்கள், வேடிக்கை வினோத நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.

பானை உடைத்தல், ஓலைப்பின்னல், கிரீஸ் மரம் ஏறுதல், பனிஸ் சாப்பிடுதல், தேங்காய் துருவுதல், தேசிக்காய் சமநிலை போட்டி, மரதன் ஓட்டப்போட்டிகள் மற்றும் தடைத்தாண்டல் என்பன சிறப்பம்சங்களாக அமைந்திருந்ததுடன் கொவிட் -19 பரவலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான சுகாதார படிமுறைகளை பின்பற்றி இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களால் கொடி அசைக்கப்பட்டு மரதன் மற்றும் சைக்கிளோட்ட போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நாள் முழுவதும், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான சிவில் ஊழியர்களும் புத்தாண்டு நிகழ்வுகளில் பங்கேற்றனர். அங்கு அவர்கள் சகலருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் மேற்படி நிகழ்வு அமைந்திருந்தது.

இதன்போது இடம்பெற்ற 35 நிகழ்வுகளில் பங்கேற்று வெற்றிபெற்று பெறுமதியான பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.