Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2021 14:25:24 Hours

வன்னியிலுள்ள வறுமையான மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சக்கர நாற்காலி வழங்கிவைப்பு

கொழும்பு மாவட்டத்திலுள்ள நன்கொடையாளர்களால் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 ஆவது படைப்பிரிவின் 212 பிரிகேட் படையினருக்கு வழங்கப்பட்ட உதவியுடன் வன்னி, தந்திரிமலை பிரதேசத்திலுள் வறிய குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு புலைமைப்பரிசில்கள், புத்தகங்கள் மற்றும் விஷேட தேவை உடையேருக்கான சக்கர நாற்காலிகளும் ஜனவரி 10 – 14 வரையான திகதிகளில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளுக்கான நன்கொடை ராஜா ஜூவலர்ஸ் தனியார் நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்பட்டிருந்ததுடன் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 21 படைப்பிரிவு தளபதி ஆகியோரின் ஆசீர்வாதத்தில் 212 பிரிகேட் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி ஜனவரி 10 – 14 வரையான நாட்களில், 212 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் தந்திரிமலே பிரதேசத்திலுள்ள பல வீடுகளுக்கு 21 ஆவது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து நன்கொடைகளை பகிர்ந்தளித்தார். இதன்போது 5வது இலங்கை தேசிய பாதிகாவல் படையின் கட்டளை அதிகாரி மற்றும் நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். buy shoes | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ