15th May 2023 18:25:13 Hours
வெசாக் தினத்தை முன்னிட்டு 551 வது காலாட் பிரிகேட்டினரின் சமூக சேவையின் ஒரு பகுதியாக கரவெட்டி வதிரி ஸ்ரீ பரமானந்தா சிறுவர் மற்றும் முதியோர் இல்லத்தின் 35 சிறுவர்கள் மற்றும் 10 முதியோர்களுக்கு சனிக்கிழமை (மே 13), சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.
55 வது காலாட் படைபிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் ஏற்பாட்டுக்கு அமைய இந் நிகழ்வு படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
4 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 16 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடி பெரியவர்கள் மற்றும் சிறுவர்களை மகிழ்வித்தனர்.