10th November 2023 21:24:01 Hours
புதிதாக நிலை உயர்வு பெற்று தொமபேகொட இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்திற்கு (செவ்வாய்கிழமை) 2023 நவம்பர் 07 அன்று வருகை தந்த இராணுவ போர் கருவி படையணியின் மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடிஓ அவர்களை இராணுவ போர் கருவி படையினர் இராணுவ சம்பிரதாயங்களுடன் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.
இராணுவ போர் கருவி படையினர் நுழைவாயிலில் சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் ஈஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடிஓ அவர்கள் தனது படையினருக்கு உரையாற்றியதுடன், அவர்களுடன் குழுப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பாராட்டு விழாவில் கலந்து கொண்டனர்.