Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2020 15:40:52 Hours

வடக்கிலிருந்து வந்த பேருந்துகளில் இருந்து கஞ்சா பொதிகள் படையினரால் மிட்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 561 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 16 ஆவது சிங்கப் படையணியின் படையினரால் இம் மாதம் (25) ஆம் திகதி கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கண்டிக்கு செல்லும் பேருந்துகள் ஏ 9 வீதியிலுள்ள புத்தூர் சந்தியில் வைத்து பரிசோதிக்கும் போது இந்த வண்டியிலிருந்து 25 கிலோ கேரள கஞ்சாவும், சட்ட விரோதமான முறையில் கொண்டு சென்ற 99.5 அடி பலகைகளும் படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கமைய நாட்டிலிருந்து போதைப் பொருள் ஒழிப்பை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைக்கமைய படையினரால் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த சட்ட விரோதமான பொருட்கள் மீட்கப்பட்டன.

563 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 21 ஆவது சிங்கப் படையணியினரால் இம் மாதம் (26) ஆம் திகதி ஓமந்தை சோதனை சாவடியில் வைத்து 4.13 கிலோ கேரள கஞ்சாக்கள் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வந்த பேருந்தி வண்டியிலிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த பொருட்கள் இராணுவத்தினரால் புளியங்குளம் மற்றும் ஓமந்தை பொலிஸ் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டன. அத்துடன் 16 ஆவது சிங்கப் படையணியினரால் புத்தூர் சோதனை சாவடியில் வைத்து யாழிலிருந்து அக்கரைப்பற்று வரைக்கு பயணத்தை மேற்கொண்ட பேருந்து வண்டியிலிருந்து 5 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி, 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி ஜாலிய சேனாரத்ன, 561 மற்றும் 563 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன தலைமையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.Asics shoes | Nike Shoes, Sneakers & Accessories