Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2024 14:48:16 Hours

ரக்பி போட்டியில் 1 வது இலங்கை சிங்க படையணி வெற்றி

2024 ஏப்ரல் 22 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணியில் இலங்கை சிங்கப் படையணியின் 4 வது படையலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான படையணிகளுக்கிடையிலான ரக்பி போட்டியில் 1 வது இலங்கை சிங்க படையணி வெற்றி பெற்றது.

11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன், போட்டியின் சிறந்த வீரராக 1 வது இலங்கை சிங்க படையணியின் இரண்டாம் லெப்டினன் ஐ.ஜி.கே வீரசிங்க அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

நிகழ்வில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் சிங்கப்படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியுபீடிடப்ளியு நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இலங்கை சிங்கப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.