Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

ரக்பி போட்டிகளில் சம்பியன் கிண்ணம் இராணுவத்தினருக்கு

முப்படை மற்றும் பொலிஸ் ரக்பி வீரர்களுக்கான ரக்பி போட்டி, திம்பிரிகஸ்யாய பொலிஸ் மைதானத்தில் ஒக்டோபர் 30 முதல் 31 ஆம் திகதி வரையில் நடைபெற்றது.

இராணுவத்திலிருந்து இரண்டு அணிகள், விமானப்படையிலிருந்து இரண்டு அணிகள், கடற்படையிலிருந்து இரண்டு அணிகள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் இரு அணிகள் என்ற அடிப்படையில் இந்த போட்டிகளில் பங்குபற்றியதோடு CH மற்றும் FC மற்றும் Havelock கழக அணிகளும் இந்த போட்டிகளில் பங்குபற்றின.

ஆதரவாளர்களின் கரகோசம் மற்றும் ஆரவாரத்திற்கு மத்தியில் இடம்பெற்ற போட்டிகளில் விமான படை அணி வெற்றி கொண்டிருந்த போதிலும்,இலங்கை இராணுவ “ஏ” அணி சம்பியன்ஷிப்பையும், “பி” அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.