Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th April 2021 07:00:22 Hours

யாழ் பாதுகாப்பு படையினரால் மற்றுமொரு புதிய வீடு நிர்மாணம்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் ஐயக்கச்சி கோவில்வயலில் வசிக்கும் வரிய குடும்பத்திற்காக, மேலும் ஒரு புதிய வீட்டைக் கட்டினர். இதற்கான அனுரணையினை நன்கொடையாளர்களால் கூட்டாக வழங்கப்பட்டது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , இந்து சமய சடங்குகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை (13) விதவை தாயான திருமதி வேலுசாமி சனாதினி என்பவருக்கு குறித்த வீடு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

குறித்த வீட்டின் திறப்பு விழா நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் கலந்துகொண்டு அதனை திறந்துவைத்தார்.

552 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் 12 விஜயபாகு காலாட் படையணியின் படையினர் கட்டுமானத்திற்கு தேவையான தங்கள் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் திறமையான மனித வளத்தையும் வழங்கினர்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் 55 வது படைப் பிரிவின் தளபதி, வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, 552 வது பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் கட்டுமான பணிகளில் பங்களித்த படையினர் பங்கேற்றனர்.