Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th July 2021 23:12:37 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் பாரிய அளவிலான சேதன பசளை உற்பத்தி

2021 பெரும் போக உற்பத்திற்கான 3600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டு, சேதன பசளையின் தேசிய உற்பத்தி உந்துதலுக்கு ஏற்ப பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி தோட்டக்கலை நிபுணர்களுடனான கலந்தாலோசணையுடன் பாலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான பசளை உற்பத்தியைத் இராணுவம் ஞாயிற்றுக்கிழமை (4) தொடங்கியது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பெரும் போகத்தில் பயன்படுத்தும் வகையில் 3600 மெட்ரிக் டொன் சேதன பசளை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் திட்டம் ஆரம்பித்தார். இந்த திட்டத்திற்கான நிபுணத்துவ வழிகாட்டுதல் திரு கோலித விக்ரமசிங்க மற்றும் திரு ஜகத் சோமதுங்க ஆகியோரால் வழங்கப்பட்டது, அவர்கள் திட்டம் தொடங்குவதற்கு முன்பு யாழ்ப்பாண தளபதி மற்றும் பிறருடன் சில சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படை தலைமையக உறுப்பினர்கள் - யாழ்ப்பாணம் தங்கள் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றதும் குடாநாட்டு விவசாய சமூகத்திற்கு வேதன பசளை பயன்பாட்டு முக்கியத்துவம் மற்றும் அத்தகைய நடைமுறைகளின் நீண்டகால விளைவுகள் குறித்து விழிப்புணர்வு அமர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். தொடக்க நிகழ்வின் போது படைப்பிரிவுகளின் தளபதிகளும் கலந்து கொண்டனர்.