Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கூடைப் பந்துப் போட்டி

யாழ்பாணத்தில் உள்ள இளைஞசர்களின் கூடைப் பந்து திறமைகள் மற்றும் அவர்களின் விளையாட்டுத் திறமைகளை மேபடுத்தும் நோக்குடன், யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ், 512 ஆவது பாதுகாப்புத் தலைமையகத்தினால், தொடர் கூடைப் பந்துப் போட்டியானது ஏற்பாடுசெய்யப்பட்டது. இப்போட்டியில் எட்டு பாடசாலைகளைக் சேர்ந்த அணியினர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் சம்பியன்ஷிப்பினை கொகுவில் இந்து கல்லூரி தனதாக்கிக் கொண்டதோடு மனிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையானது இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியின் இறுதி நிகழ்வு செவ்வாய்க் கிழமை (25) யாழ்பாணத்தில் உள்ள பொது கூடைப் பந்து மைதானத்தில் இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவாண் வணிகசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களை வழங்கி வைத்தார். 51 மற்றும்52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதிகள்,வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு படைத் தளபதி,படைத் தலைமையகங்களின் கட்டளைத் தளபதிகள், வடமாகாண கல்விச் செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிபர்கள்,ஆசிரியர்கள்,படையினர், யாழ் கூடைப் பந்து சங்கத்தின் தலைவர், மற்றும் பல பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | 【海外近日発売予定】 サウスパーク × アディダス オリジナルス キャンパス 80S "タオリー" (GZ9177) - スニーカーウォーズ