Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2020 13:50:40 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தால் பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கு புதிய வீடு கையளிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது நிதியில் யாழ், வட்டுக்கோட்டை பிரதேசத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் தனது கஜன் என்ற குழந்தையுடன் குடிசையில் வாழ்ந்து வந்த திருமதி மோகன் உத்தரராஜினிக்கு புதிய வீட்டை நிர்மாணித்து கொடுத்தனர்.

அதற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களால் (20) ஆம் திகதி புதன்கிழமை 51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் புதிய வீடு பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. இந்த திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகக் கட்டளைத் தளபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 513 ஆவது படைத்தளபதியின் மேற்பார்வையின் கீழ் 11 ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி 5 ஆவது பொறியியலாளர் சேவைப் படையணியோடு இணைந்து வீட்டின் நிர்மான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

குடிநீருக்கான குழாய் கிணறு அமைப்பதற்கு தயாள குணம் கொண்ட யாழ் திரு தபோத்வரன் விஸ்வநாதன் என்பவர் நிதியுதவி வழங்கினார். இப்பிரதேசம் குடிநீர் தட்டுப்பாடுடைய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் 51 ஆவது படைப்பிரிவுத் தளபதி, பிரிகேட் தளபதிகள் வலிக்காமம் பிரதேச செயலாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர். Adidas footwear | Zapatillas de running Nike - Mujer