22nd March 2023 21:25:06 Hours
இராணுவத்தினருக்கு அறிவூட்டும் நோக்கில் ‘போதைக்கு அடிமையாதல் மற்றும் அதுபோன்ற பழக்கவழக்கச் செயல்களிலிருந்து தடுத்தல்’ என்ற தலைப்பில் விரிவுரை அமர்வொன்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்டாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.கே.ருவன் குமார, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் என்.எம்.லக்ஷ்மன் எதிரிமான்ன ஆகியோருடன் இணைந்து நடத்திய சுமார் 8 மணித்தியால இந்த நிகழ்ச்சி திட்டத்தில் 27 அதிகாரிகள் மற்றும் 300 சிப்பாய்களின் பங்குபற்றினர்.
இறுதியில், யாழ். பாதுகாப்பு படை தலைமையக கேணல் ஒருங்கிணைப்பு, கேணல் நிலந்த விஜேசிங்க அவர்கள் இரண்டு விரிவுரையாளர்களுக்கும் யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் சார்பாக பாராட்டுச் சின்னங்களை வழங்கினார்.
அதே விரிவுரை அமர்வு மறுநாள் (மார்ச் 20) 55 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டது. இதில் 29 அதிகாரிகள் மற்றும் 410 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரு சந்தர்ப்பங்களிலும் இணைந்திருந்தனர்.