28th July 2021 11:00:38 Hours
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 26 வது தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஞாயிற்றுக்கிழமை (25) 52 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதிக்கு 52 வது படைப்பிரிவு தளபதியினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டி வைப்பதற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட தளபதிக்கு 52 வது படைப்பிரிவு தளபதியினால் 52 வது படைப்பிரிவின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர், 522 வது பிரிகேடிற்கு விஜயம் மேற்கொண்ட தளபதிக்கு அவரது வருகையின் நினைவம்சமாக பிரிகேட் வளாகத்தில் மா மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையடுத்து ஆட்சேர்ப்பு செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக விடத்தபளையிலுள்ள பட்டாலியன் பயிற்சி கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்ட யாழ்.தளபதி 7 வது கஜபா படையணி மற்றும் 12 வது கெமுனு ஹேவா படையணிகளின் படையினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
52 வது படைப்பிரிவின் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்றனர்.