21st August 2021 12:00:36 Hours
இராணுவத்தின் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பலவீனமான பிரிவினருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் இராணுவ நடமாடும் சேவை 4 வது இலங்கை இராணுவ வைத்திய படையினரால் வியாழக்கிழமை (19) தொடங்கப்பட்டது.
இந்த நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் யாழ்ப்பாண மாவட்ட கொவிட் -19 கட்டுப்பாடு மற்றும் தடுப்பு செயலணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிவாக்கு அவர்களின் வழிநடத்தலில் தொடங்கப்பட்டது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தினை வியாழக்கிழமை (19) யாழ்பாண பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பிரதம அதிதியாக சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைவாக கலந்து சிறப்பித்தார். இது தொடரும் நாட்களில் குடாநாடெங்கும் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்விழாவில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா உரையாற்றுகையில் கொவிட் -19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்திலும் மற்றும் யாழ்ப்பாண மக்களின் ஏனைய அனைத்து தேவைகளிலும் பாதுகாப்புப் படைகளின் மிகுந்த அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
51 வது படைப்பிரிவு தளபதி , 511, 513 மற்றும் 515 பிரிகேட்களின் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் மருத்துவப் பணியாளர்களும் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.