Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2023 21:10:05 Hours

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் வெளியேறும் தளபதிக்கு மரியாதை

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற சேவையை முடித்து இராணுவ நிரந்தர படையணியில் இருந்து 2023 மே 31 அன்று ஓய்வு பெற்றார்.

இவர் யாழில் புறப்படுவதற்கு முன்னர், 51, 52, 55 வது காலாட் படைபிரிவுகள் மற்றும் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேசங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார். யாழ் குடாநாட்டில் அமைதியான சூழலைப் பேணுவதற்காக தனது பதவிக்காலத்தில் பேணப்பட்ட உயர்தர நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அந்தந்த அமைப்புகளில் சேவையாற்றும் அனைத்து படையினருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைகளுக்கிணங்க 16(தொ)கெமுனு ஹேவா படையணியின் படையினரால் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அலுவலகத்தை உத்தியோகபூர்வ கையளிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

பின்னர் வெளிசெல்லும் தளபதி, படையினருக்கு உரையாற்றுவதற்கு முன் குழுப் படம் எடுத்துக் கொண்டதுடன், அணைவருக்கும் நன்றியை தெரிவித்தார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் மற்றும் இரவு உணவு விருந்திலும் கலந்து கொண்டார்.