யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 55 ஆவது படைப் படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட காலபந்தாட்ட லீக் இறுதிச் சுற்றுப் போட்டிகள் யாழ் துறையப்பா மைதானத்தில் இம் மாதம் (16) ஆம் திகதி இடம்பெற்றன.
இந்த போட்டியில் வடமராச்சி மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த 22 கால்ப்பந்தாட்ட விளையாட்டு கழகங்கள் பங்கேற்றிக்கொண்டன.
பருத்திதுறை, நெல்லியடி, ஆனையிறவு, பலை, மரதன்கேணி, வடமராச்சியை சேர்ந்த கழகங்கள் பங்கேற்றியது.
இறுதிச் சுற்றுப் போட்டியில் கல்லிமேடு கால்பந்தாட்ட கழகத்தினர் திறமையாக விளையாடி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். நெல்லியடி அல்லை நட்பு கால்ப்பந்து கழகத்தினர் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டனர்.
வெற்றியாளர்களுக்கு 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேகொட, 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி, மேற்கு பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதி, படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பரிசுகளை வழங்கி வைத்து கௌரவித்தனர். latest Nike release | Autres