Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2020 08:12:08 Hours

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட 604 நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை (65), லைசியம் குருனாகல (33), ஐயக்கச்சி (160), விடத்தபாலி (60), டொல்பின் ஹாட்டல் (29), ஹேகித்த (01) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் முல்லைத்தீவில் (256), ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 604 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் 10 ஆம் திகதி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

மாத்தறை,கொழும்பு, காலி, குருநாகல் மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த நபர்களுக்கு, இராணுவத்தினரால் உணவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் தனிமைப்படுத்தல் மையங்களின் கட்டளை அதிகாரிகள் அவர்களை வழியனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். spy offers | nike