Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th May 2020 08:22:23 Hours

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பனிச்சன்கேனி (33), மியான்குளம் (22), கட்டுகெலியாவை (14) கல்கந்த (72) ஹேகித்த (2) மற்றும் கடற்படையினரால் நிர்வகிக்கப்படும் கல்பிட்டிய (5) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் மூன்று வார காலத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட 148 பேர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் இன்று காலை (7) ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

மாத்தரை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த நபர்களுக்கு, இராணுவத்தினரால் உணவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் தனிமைப்படுத்தல் மையங்களின் கட்டளை அதிகாரிகள் அவர்களை வழியனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports Shoes | Shop: Nike