11th July 2021 18:10:27 Hours
இன்று காலை (13) இலங்கையில் 1,568 கொவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 80 பேர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த இலங்கையர்கள். ஏனைய 1,488 நபர்கள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள. அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகபடியாக களுத்துறை மாவட்டத்தில் 225 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மாவட்டத்தில் 154 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 153 பேரும் பதிவாகியுள்ளனர். மீதி 956 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளதாக கொவிட் -19 பரவுவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை (13) வரை இலங்கையில் மொத்தம் 271,105 கொவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 168,090 பேர் புத்தாண்டுக்குப் பின்னர் இணங்காணப்பட்டவர்கள்.
இன்று (13) அதிகாலை 0600 மணி வரை 1,804 பேர் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். ஜூலை (13) ம் திகதி வரை இலங்கையில் கொவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகும் அவர்களில் 15 பெண்களும் 16 ஆண்களும் உள்ளடங்குவர்.
இன்று (13) ஹோட்டல்கள் மற்றும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் 4,853 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இன்று (13) அதிகாலை 0600 மணி வரை (கடந்த 24 மணி நேரத்தில்) 1,138 பேர் 31 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தனிமைப்படுத்தல் நிறைவின் பின் வீடு திரும்பினர்.
இன்று (13) காலை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெந்தலை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம், ரப்பர் வத்த கிராமம், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் வடக்கு மற்றும் தெற்கு கிராம சேவகர் பிரிவின் ஜின்னா வீதி, கொலன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபுர கிராம சேவகர் பிரிவுகள் ஆகியன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.