Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2022 19:18:10 Hours

மேற்கு பாதுகாப்பு படை தலைமையக படையினருக்கு 'பிரச்சினைகளின் தீர்வு' என்ற தலைப்பில் விரிவுரை

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லாவின் வழிகாட்டலுக்கமைய மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 19 அதிகாரிகள் மற்றும் சுமார் 120 படையினருக்கு புதன்கிழமை (12) 'பிரச்சினைகளைத் தீர்க்கும் முறைமைகள்' என்ற தலைப்பில் விலைமதிப்பற்ற விரிவுரை மற்றும் கலந்துரையாடல் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணியாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவினால் வழங்கப்பட்டது.

இந்த விரிவுரை பனாகொடை இராணுவ வளாகத்தின் இலங்கை பொறியியலாளர்களின் கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டதுடன் அங்கு விரிவுரையாளர் பிரச்சினைகளை கண்டறிதல், அணுகுமுறைகள் மற்றும் தீர்வுகளுக்கான அணுகுமுறைகள், பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்றவற்றில் சமூகம் மற்றும் பல்வேறு சமூக சூழல்களில் இருந்து பல எடுத்துக்காட்டுகளுடன் விரிவுரையினை மேற்கொண்டார்.

அன்றைய நிகழ்ச்சி நிரலின் முடிவில் பங்கேற்பாளர்கள் கேள்வி மற்றும் பதில் அமர்வினை மேற்கொண்டதுடன் இதன் மூலம் அவர்களின் எண்ணங்கள் மற்றும் கேள்விகளுக்கு மாற்று பதில்கள் மற்றும் தீர்வுகள் வழங்கப்பட்டன.