19th August 2023 20:51:02 Hours
மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதியாக வெள்ளிக்கிழமை (17 ஓகஸ்ட் 2023) பனாகொடவில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி இராணுவ மரபுகளின்படி வளாகத்திற்கு வந்தவுடன் இலங்கை பொறியியல் படையணியினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
உத்தியோகபூர்வ இராணுவ மரியாதைகளுக்குப் பிறகு மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றதுடன், தனது புதிய பதவியை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அடையாளமாக கையொப்பமிட்டார். அதனைத் தொடர்ந்து, புதிய மேற்குத் தளபதி அவர்கள், பிரதான அலுவலக வளாகத்திற்கு முன்பாக மரக்கன்று ஒன்றை நட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன் குழுப் படத்தினையும் எடுத்துக் கொண்டார்.
சம்பிரதாயங்களுக்குப் பிறகு மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் படையினருக்கு உரையாற்றியதுடன் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் வெற்றியை அடைவதில் அதன் ஒருங்கிணைந்த பங்கையும் வலியுறுத்தினார். அவர் தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டு அவரது இலக்குகளை கோடிட்டுக் காட்டியதுடன் படையினரின் பொதுவான நோக்கங்களை நோக்கி வேலை செய்ய தூண்டினார். படையினருடன் நட்புறவைக் கட்டியெழுப்பும் முயற்சியில், புதிய மேற்குத் தளபதியும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபாசரத்தில் பங்கேற்றார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணி நிலை அதிகாரிகள் புதிய மேற்குத் தளபதிக்கு விரிவான விளக்கமொன்றை வழங்கினர். இந்த விளக்கத்தின் போது அவர்களின் அந்தந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் தற்போதைய வரிசைப்படுத்தல் நிலை மற்றும் தற்போதைய தேசத்தை கட்டியெழுப்பும் திட்டங்கள் உள்ளடக்கிருந்தன.
61 மற்றும் 14 வது காலாட் படைபிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிப்பாய்கள் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.