Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2022 17:02:28 Hours

மேற்கு பாதுகாப்பு படையினரால் தனியார் காணியில் ஏற்பட்ட தீ அனைக்கப்பட்டது.

திங்கட்கிழமை (8) அவசர தேவைக்கு பதிலளிக்கும் வகையில், மேற்குப் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 143 வது பிரிகேடின் 16 வது கஜபா படையணி படையினர் புத்தளம் சீரம்பியாடிய தனியார் காணியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க உதவினர்.

அப்பகுதியில் வசிப்பவர்களின் தகவல் மற்றும் வேண்டுகோளைத் தொடர்ந்து 16 வது கஜபா படையணியின் 20 இராணுவ வீரர்கள், இலங்கை கடற்படை படையினர் மற்றும் சில தன்னார்வலர்களின் ஆதரவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைவாக பரவிய தீயை கட்டுப்பட்டிக்கு கொண்டுவருவதற்கான பணியை ஆரம்பித்தனர்.

சில மணி நேரங்களுக்குள் தீ முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் தீயானது கிட்டத்தட்ட 15 ஏக்கர் நிலத்தை அழித்ததுடன், எஞ்சிய சொத்துக்களுக்கு அதிக சேதம் ஏற்படுவதற்கு முன்பதாக தீ கட்டுப்படுத்தப்பட்டது.