17th August 2023 21:04:43 Hours
சிரேஷ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டு மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் கேடிபீ சில்வா யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார். அவர் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நடுவதற்கு அழைக்கப்படுவதற்கு முன்னர், இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் வழங்கப்பட்ட கௌரவிப்பு அணிநடை மரியாதையை மீளாய்வு செய்வதற்கு அழைக்கப்பட்டார்.
அன்றைய தினத்திற்கு நினைவுகளை சேர்க்கும் வகையில் அவர், குழு படங்களும் எடுத்துக் கொண்டதுடன், அதிகாரிகளுடன் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். பின்னர் அனைத்து நிலையினருடனான மதிய உணவில் கலந்துகொண்டதுடன், மேற்குத் தளபதியாக இருந்த காலத்தில் படையினரின் பெறுமதிமிக்க சேவைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதே சந்தர்ப்பத்தில் மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுக்கு சிறந்த தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்கான பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.
மாலையில் வழமையான பிரியாவிடை இரவு விருந்து மேற்குத் தளபதியை கௌரவிக்கும் வகையில் அனைத்து காலாட் படைப்பிரிவுகள், பிரிகேட்டுகள் மற்றும் படையலகுகளின் அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ தளபதியாக தனது நியமனத்தை கைவிடுவதற்கு முன்னர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இருக்கும் படைப் பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்குச் சென்று படையினருக்கு உரையாற்றினார்.
14 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படையின் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.