18th April 2024 14:58:33 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் 2024 ஏப்ரல் 17 அன்று பொறியியல் சேவைகள் படையணி விரிவுரை மண்டபத்தில் தொடர் விரிவுரைகளை நடத்தியது.
லெப்டினன் கேணல் டிபீஜீகேபீ அல்விஸ் ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் விரிவுரையை நடத்தினார். இவ் விரிவுரையில் தனிப்பட்ட மேம்பாடு, வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரித்தல் மற்றும் தொழில்முறை பொறுப்புகளுடன் குடும்ப கடமைகளை ஒத்திசைத்தல் போன்றவை தொடர்பில் விரிவுரைகள் நடத்தப்பட்டன.
இந்த அமர்வில் 25 அதிகாரிகள் மற்றும் 180 சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.