Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2020 00:30:23 Hours

மேன்மை தங்கிய ஜனாதிபதியினால் இராணுவ தளபதியின் பரிந்துரைக்கு அமைவாக தேசிய இராணுவ வீரர் தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவியுயர்வு

முப்படை சேனாதிபதி, மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு தலைமை பிரதானியும் , கோவிட் 19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் பரிந்துரையிற்கு அமைவாக 11 ஆவது தேசிய இராணுவ வீரர் தினத்தை முன்னிட்டு இம் மாதம் 18 ஆம் திகதி இராணுவத்திலுள்ள உயரதிகாரிகள் , அதிகாரிகள் 177 பேருக்கு அடுத்த நிலைக்கான பதவி உயர்வு இராணுவ செயலனி பணியகத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி அவர்கள் புதிதாக பதவியுயர்வு பெற்றுள்ள 5 மேஜர் ஜெனரல்கள், தொண்டர் படையணியைச் சேர்ந்த 4 பிரிகேடியர்கள், 39 லெப்டினன்ட் கேர்ணல்கள், 69 மேஜர்கள் மற்றும் 60 லெப்டினன்ட் நிலை அதிகாரிகளுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பதவியுயரத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்களின் விபரங்கள் கீழ்வருமாறு

மேஜர் ஜெனரல் சி.யூ மாரசிங்க ஆர்எஸ்பி யூஎஸ்பி

மேஜர் ஜெனரல் டி.ஜே கொடிதுவக்கு ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி என்டியூ

மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்க ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி என்டீசி

மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ பெர்ணாண்டோ ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி

மேஜர் ஜெனரல் சி,டீ வீரசூரிய ஆர்டப்ள்யூபி ஆர்எஸ்பி என்டியூ

பிரிகேடியர் எஸ்.என் சமரவிக்ரம

பிரிகேடியர் எச்.எம்.என்.பீ ஹேரத்

பிரிகேடியர் என்.ஜி.எஸ் திலகரத்ன

பிரிகேடியர் கே.என் பெரேரா Nike sneakers | Nike Shoes