27th December 2021 12:28:18 Hours
இலங்கை இராணுவ பொயிறியல் படையணியின் 20 வது தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்கள் இலங்கை இராணுவ பொறியியல் படையணித் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (24) பதவியேற்றுக்கொண்டார்.
இதன்போது படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதியவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, நிலையத் தளபதி பிரிகேடியர் மனோஜ் மதுரப்பெரும அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து தளபதியவர்களால் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையடுத்து மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வின் போது இலங்கை இராணுவ பொறியியல் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வின் அடுத்தகட்டமாக இலங்கை இராணுவ பொறியியல் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையொன்றை தளபதியவர்கள் சூம் தொழில்நுட்பத்தினூடாக ஆற்றியிருந்தமையும் சிறப்பம்சமாகும்.
மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் சப்புகஸ்கந்தவிலுள்ள பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாகவும் நியமனம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தகாகும். இந்நிகழ்வுகள் கொவிட் – 19 வழிகாட்டல்களுக்கமைய இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.