12th October 2023 18:18:48 Hours
74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஏ அமரசேகர யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் செவ்வாய்கிழமை (10 ஒக்டோபர்) மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டமைக்காக அதிகார சின்னங்களை வழங்கினார்.
இராணுவ தினத்துடன் இணைந்து பதவி உயர்வு பெற்ற ஏழு மேஜர் ஜெனரல்களில் இவரும் ஒருவர். இவர் தளபதி அலுவலகத்தில் இராணுவத் தளபதியிடமிருந்து தனது நிலை உயர்வுக்கான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றார் மற்றும் இராணுவத்தில் இந்த நிலையுடன் தொடர்புடைய அதிகாரத்தின் அடையாள வாளையும் ஏற்றுக்கொண்டார்.
இராணுவத் தளபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த மேஜர் ஜெனரல் டி.ஏ அமரசேகர யு.எஸ்.பீ அவர்கள் இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் குழு படம் எடுத்துகொண்டார்.