முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கட் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது கடந்த நவம்பர் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.
59 ஆவது படைப் பிரிவின் 12 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கிரிக்கட் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இந்த போட்டிகளில் இறுதிச் சுற்றுப் போட்டியானது 593 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 19 ஆவது கெமுனு காலாட் படையணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இடையில் 593 ஆவது படைத் தலைமையகத்தின் கிரிக்கட் அணியானது வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் K. H. P. பெர்ணாண்டோ அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து வெற்றியீட்டிய வெற்றியாளர்களுக்கும் பரிசுகளையும் வழங்கி வைத்து கௌரவித்தார். Sneakers Store | Sneakers