24th November 2021 14:53:50 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவின் 651 வது பிரிகேடின் 19 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் திங்கட்கிழமை (22) டெங்கு தொற்றுநோய் தடுப்பிற்காக முழங்காவில் மருத்துவமனை வளாகத்தை துப்பரவு செய்தனர்.
65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், 651 வது பிரிகேட் தளபதி மற்றும் 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரியின் ஒத்துழைப்பில் மற்றும் சிப்பாய்கள் மருத்துவமனை ஊழியர்களின் ஆதரவுடன் வளாகத்தை சுத்தம் செய்தனர்.