Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2020 15:07:25 Hours

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் வியாழக் கிழமையன்று (05) கடமைப் பொறுப்பேற்றார்.

இவ்வாறு முல்லைத் தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்தின் படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார். இதன் போது மேஜர் ஜெனரல் ஜயதிலக அவர்கள் மத அனுஷ்டானங்களிற்கமைவாக தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு கடமைப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து இப் புதிய படைத் தளபதியவர்களால் இப் படைத் தலைமையகத்தில் மா மரக் கன்று நடப்பட்டதுடன் அனைத்து படையினருடனான தேநீர் விருந்துபசார நிகழ்வும் இதன் போது இடம் பெற்றது.

அந்த வகையில் இப் புதிய தளபதியவர்கள் இப் படைத் தலைமையகத்தின் முன்னைய தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களின் பதவிக்கு அமர்த்தப்பட்டதுடன் இவ் முன்னைய தளபதியவர்கள்; தற்போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக பதவி வகிக்கின்றார்.

இந் நிகழ்வில் முல்லைத் தீவு முன்னரங்க பாதுகாப்பு அதிகாரியவர்கள் மற்றும் படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். ' Nike Sneakers | Nike sneakers