Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2023 22:47:00 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினரால் முல்லைத்தீவு நோயாளர்களுக்கு இரத்த தானம்

நோயாளிகளின் இரத்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த மே 1ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் இரத்ததான நிகழ்வினை மேற்கொண்டனர்.

திட்டத்தின் போது 120 க்கும் மேற்பட்ட படையினர் இரத்த தானம் செய்ய முன்வந்தனர், படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க முல்லைத்தீவு வைத்தியசாலை இத்திட்டத்திற்கு வைத்திய ஊழியர்களை வழங்கியது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, அவர்கள் நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.