Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2022 12:17:02 Hours

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி 59 வது படைப்பிரிவுக்கு விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் டிசம்பர் 26 அன்று 59 வது காலாட் படைபிரிவுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க அவர்களிடமிருந்து படைப்பிரிவின் பொறுப்புப் பகுதியில் அவர்களின் வகிப்பங்கு மற்றும் பணிகள் குறித்து விரிவான விளக்கத்தைப் பெற்றார்.

படையினர்களுக்கு ஆற்றிய உரையின் போது, மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள், பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கு தொடர்ச்சியான பயிற்சியின் அவசியத்தை தனது உரையில் சுட்டிக்காட்டினார். மேலும் இராணுவத்தின் விம்பத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருக்கும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்மாதிரியான நடத்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

விஜயத்தின் இறுதியில், விருந்தினர் பதிவேட்டில் தனது கருத்துகளை பதிவிட்டார்.