Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2019 08:33:33 Hours

முல்லைத்தீவு படையினர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான செயலமர்வு

இராணுவ தடுப்பு மருத்துவ பணியகத்தின் பூரன ஏற்பாட்டில் முல்லைத்தீவு இராணுவத்தினருக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான செயலமர்வு இம் மாதம் (6) ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவில் பணி புரியும் இராணுவத்தினருக்கு இந்த செயலமர்வு இடம்பெற்றது.

இந்த செயலமர்வில் இராணுவ தடுப்பு மருத்துவ பணியகத்தின் விஷேட வைத்திய நிபுணரான கேர்ணல் R. M. M மொனராகல, மேஜர் U. P மல்லவராச்சி, கெப்டன் S. M. P. K சமரகோன், லெப்டினன்ட் P. A. C. P. K பேதுருஆரச்சி மற்றும் லெப்டினன்ட் K. P. K அந்தனி போன்ற அதிகாரிகளினால் விரிவுரைகள் படையினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவத்திலுள்ள 40 அதிகாரிகள் மற்றும் 247 படை வீரர்கள் இந்த செயலமர்வில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Authentic Sneakers | adidas Yeezy Boost 350