Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th November 2022 19:10:20 Hours

முல்லைத்தீவு தளபதி தனது படை அலகுகளுக்கு விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும், இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் சிப்பாய்களின் நல்வாழ்வைப் பரிசோதிக்கவும், நிர்வாக நடைமுறை விடயங்களைப் பற்றிய தகவல்களைப் பெறவும், தனது கட்டளைக்கு கீழுள்ள படையலகுகளுக்கு நவம்பர் 15 தொடக்கம் 17 வரை கள விஜயம் மேற்கொண்டார்.

கட்டளை அதிகாரிகள், 8 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரிகள் லெப்டினன் கேணல் என்டிஎன் ஜெயவர்தன, 11 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரிகள் லெப்டினன் கேணல் கேஜிஎம்பீ குணதிலக்க மற்றும் 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரிகள் மேஜர் ஏஏஎஸ் அமரதுங்க ஆகியோர் ஒட்டுசுட்டான், தலைமன்னார், மன்னார் பகுதிகளில் அவரை வரவேற்றனர்.

ஒவ்வொரு படையலகுகளிலும் நுழைவாயிலில் அவருக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுடன், அவரது வருகையை நினைவு கூறும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து அவர் குழு படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்ட பின்னர், படையினர்களுக்கு உரையாற்றினார். அந்தந்த படையணிகளில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் தளபதி வழங்கினார்.

8 வது இலங்கை பீரங்கி படையணி, 11 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணிகளுக்கான விஜயமானது அனைத்து படையினர்களுக்குமான சிற்றுண்டி விருந்துடன் நிகழ்வுகள் முடிவடைந்தன.