Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 15:07:19 Hours

முல்லைத்தீவில் தேசிய மாணவ சிப்பாய் படையணி பயிற்சி நிலையம் திறப்பு

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவில் தேசிய மாணவ சிப்பாய் படையணி பயிற்சி நிலையம் 2024 ஏப்ரல் 07 அன்று திறந்துவைக்கப்பட்டது. இந்த புதிய வசதியானது ஆயிரக்கணக்கான மாணவ சிப்பாய்களுக்கு பயிற்சி அளிக்க உதவும், நாட்டின் எதிர்கால தலைவர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இளம் மாணவ சிப்பாய்களை பொறுப்பான மற்றும் திறமையான தலைவர்களாக வடிவமைப்பதில்தேசிய மாணவர் படையணியின் இலக்கிற்கு மேலும் வழுவூட்டும் வகையில் ரண்டம்பே பயிற்சி நிலையத்திற்கு மேலதீகமாக இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பட்ரிக் டிரஜன்,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.