03rd May 2023 22:30:00 Hours
தேசிய டெங்கு தடுப்பு வாரத்திற்கு சமாந்தரமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கிணங்க 592 காலாட் பிரிகேட் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (30) வைத்தியசாலை வளாகத்தில் டெங்கு தடுப்பு நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
592 வது காலாட் பிரிகேட் மற்றும் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றில் சேவையாற்றும் 32 சிப்பாய்கள் இத் திட்டத்தில் பங்குபற்றினர், இத் திட்டம் 592 வது காலாட் பிரிகேட் தளபதியினால் கண்காணிக்கப்பட்டது.