Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th November 2023 20:25:54 Hours

முல்லைத்தீவில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியினரால் நிர்வாக பரிசோதனை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் படையினர் குழுவொன்று, 2023 நவம்பர் 7 - 8 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தொண்டர் படையலகுகளின் வருடாந்த நிர்வாக பரிசோதனையில் கலந்துகொண்டனர்.

இங்கு வருகை தந்த பிரதித் தளபதியை கேணல் ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் ஆர்.பி.சீ.யு ரத்னமல்ல அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக ஆய்வின் முறையான நடவடிக்கைகளுக்கு முன்னதாக, பிரதி தளபதி அவர்கள் தொண்டர் படையலகின் சிறந்த நிர்வாக செயல்முறை தொடர்பாக உரையாற்றினார்.

இச்சந்திப்பின் போது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தொண்டர் படையலகுகளின் ஆய்வு நடவடிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

நிர்வாக பரிசோதனையின் போது, பிரதி தளபதி 14 (தொ) வது கெமுனு ஹேவா படையணிக்கு விஜயம் செய்ததுடன், அங்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை செலுத்தப்பட்டது.

இரண்டு நாள் நிர்வாகப் பரிசோதனையின் இறுதியில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி அவர்கள் சந்தித்தார்.

59, 64 மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த படையலகுகளின் அதிகாரிகள் இந்த நிர்வாக பரிசோதனையில் கலந்துகொண்டனர்.