Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2021 20:28:12 Hours

முன்னாள் காலாட்படை வீரரான புத்தங்கல ஆனந்த தேரர் இறைபதம் அடைந்தார்

அம்பாறை புத்தங்கல விகாரையின் தலைமை தேரரான வண. புத்தங்கல ஆனந்த நாயக்க தேரர் தனது 78 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.

வண. ஆனந்த தேரர், துறவறத்தில் பூணுவதற்கு முன்னதாக, 1964 ம் ஆண்டு மார்ச் 26 ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டிருந்ததோடு, இலங்கை இராணுவ சிங்கப்படையின் வீரராக 34 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றியிருந்தார். மேஜர் ஜெனரலாக 1998 ஏப்ரல் 29 ஆம் திகதி அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றதுடன் அதற்கு முன்னதாக 1980 களில் சிவில் கலவரங்கள் உக்கிரமடைந்த காலத்தில் (ஓய்வு) மேஜர் ஜெனரல் ஏ.ஜி வீரசேகர என்னும் அவர் பல்வேறு முக்கிய நியமனங்களை வகித்துள்ள அதேவேளை, பாராட்டத்தக்க சேவைகளையும் ஆற்றியுள்ளார்.

மேலும் இவர் கௌரவ அமைச்சர் சரத் வீரசேகர அவர்களின் மூத்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.