Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st April 2021 08:45:40 Hours

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கொவிட் – 19 கட்டுப்பாடு தொடர்பில் கலந்துரையாடல்

கொவிட் - 19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை (31) பொலன்னறுவை மாவட்ட செயலாளர் மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான சன்ன வீரசூரிய ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

அதேபோல் கொவிட் - 19 தொற்று நோயைத் தடுப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் மேலும் ஒரு சுற்று செவ்வாய்க்கிழமை (2) மாத்தளை மாவட்ட செயலக அலுவலகத்தில் மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் 53 வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே தலைமையில் நடைபெற்றது.

மாத்தளை மாவட்ட செயலாளர் திரு எஸ்.எம்.பி.பெரேரா மாவட்டத்தில் கொவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு மற்றும் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சமூகத்தின் மீதான தாக்கம், தனிமைப்படுத்தும் நடைமுறைகள், தற்போதைய முன்னேற்றம், பொறுப்புகள், விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், முன்னேற்றம் குறித்தும் பிசிஆர் / என்டிஜென் பரிசோதனைகளை நடத்துதல் மற்றும் பொலிஸார், அரச அதிகாரிகளுடன் இணைந்து , வைரஸ் பரவுவதைக் மட்டுப்படுத்த சரியான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் என்பன தொடர்பாக அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் கொவிட் -19 தொற்றுநோய் பரவலை மட்டுப்படுத்துவது தொடர்பான விடயங்கள் பற்றி கலந்துரையாட பொலிஸ் அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புடைய முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

அதேபோல், யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் யாழ். பாதுகாப்பு படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு. கே. மகேஷன் சுகாதாரத் துறை அதிகாரிகள் தலைமையில், யாழ்.பல்கலைக்கழக பிரதிநிதிகளின் பங்கேற்புடன் புதன்கிழமை (03) யாழ்ப்பாணத் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும், வவுனியா மாவட்டத்திற்கான கொவிட் - 19 தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளரும் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலக அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுகாதார சேவை பணியாளர்கள்,, அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கலந்துராயாடலின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வவுனியா, மாவட்ட செயலாளர் திரு எஸ்.எம். சமன் பந்துலசேன , கொவிட் -19 நிலை, தடுப்பு மற்றும் பரிமாற்ற கட்டுபாடு நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது போன்றவற்றை மதிப்பாய்வு செய்தனர். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் வவுனியா நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தற்போது காணப்படும் நிலைமை, சமூகத்தில் நோய் வேகமாகப் பரவுதலை தடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டினார்.

இதன் போது பொலன்னறுவை மாவட்டத்தில் தொற்றுநோயைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளரும் மேஜர் ஜெனரல் சன்னா வீரசூரியவும் அரசு மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அண்மையில் கதுருவெல கொவிட் கொத்தணியை குறைக்க உடனடி நடவடிக்கைகளை எடுத்ததற்காக சுகாதார ஊழியர்களுக்கு சிறப்பு நன்றியை தெரிவித்தனர்.

23 வது படைப்பிரிவு மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்தை, பொலன்னறுவை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் பல அதிகாரிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதற்கிடையில், மாத்தளை கொவிட் -19 தடுப்பு தொடர்பான மேலும் ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பு மாநாட்டிற்கு செவ்வாய்க்கிழமை (16) மாத்தளை மாவட்ட செயலகத்தில் 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே தலைமை தாங்கினார்.

இந்த கலந்துரையாடலின் போது, தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தனிமைப்படுத்தலின் விதிமுறைகள், விரைவான ஆன்டிஜென் சோதனைகள் நடத்துதல், நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், பொறுப்பாளர்களின் பொறுப்புகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவை விவாதிக்கப்பட்ட செயல் திட்டங்களுடன் மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் போது, மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலில் வருடாந்த தேர் திருவிழாவின் நடத்தை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக கோட்டேகொட, , மாத்தளை மாவட்ட செயலாளர், தம்புள்ளை பிரதேச செயலக அதிகாரிகள், மேயர்கள், பல்வேறு மட்ட அரசு அதிகாரிகள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கொவிட் தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பெப்ரவரி 22 ம் திகதி மாவட்ட ஒருங்கிணைப்புக் அதிகாரியும் 22 வது படைப்பிரிவு தளபதியுமான மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த தலைமையில் நடைப்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியகட்சர், மேலதிக செயலாளர் - மட்டக்களப்பு, 231 பிரிகேட் தளபதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கொவிட் -19 தொற்று தடுப்பு சார்ந்த கருத்துக்களை விவாதிக்க கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், கொவிட் -19 தொடர்பான மாத்தளை மாவட்டக் குழுக் கூட்டத்தின் மேலும் ஒரு சுற்று பெப்ரவரி 25 ஆம் திகதி மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் 53வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே கலந்து கொண்டார். இங்கு மாத்தளை முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர் திருவிழா’ மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து கலந்து கொண்டவர்கள் கலந்துரையாடினர்.

கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளுக்கான மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே மற்றும் மாவட்ட செயலாளர் திரு. எஸ்.எம்.பி.கே.பெரேரா மற்றும் பிற பங்குதாரர்களுடன் செவ்வாய்க்கிழமை (9) மாவட்ட செயலகத்தில் நடைப்பெற்றது.

தடுப்பூசி தொடர்பான தொடர்புடைய ஒருங்கிணைப்பு பணிகளும் அமர்வின் போது விவாதிக்கப்பட்டன. கொவிட் - 19 தொற்றுநோயைத் தடுப்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க பல அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட் -19 தடுப்புப் பணிகளின் தலைமை ஒருங்கிணைப்பாளராக வெள்ளிக்கிழமை (12) மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒரு மறுஆய்வு மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.

சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் புள்ளிவிவர புதுப்பிப்பை வழங்கினார் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அனைத்து பங்குதாரர்களும் விவாதித்தனர்.

இறுதியாக, குடாநாட்டு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அளித்து வரும் ஆதரவை மாவட்டச் செயலாளர் பாராட்டினார்.

மாவட்ட செயலாளர் திரு கணபதிபிள்ளை மகேசன், உதவி மாவட்ட செயலாளர், திரு எம் பிரதீபன், பிரதேச செயலாளர்கள், யாழ்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர், காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர், கடற்படை மற்றும் விமானப்படை பணிப்பாளர்கள், யாழ் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். Mysneakers | Air Jordan Release Dates 2021 Updated , Gov