13th October 2022 19:03:21 Hours
மலேசியாவில் ஒக்டோபர் 3 முதல் 7 வரை நடைபெற்ற 8 வது உலக கரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 நாடுகளின் வீரர்களுடன் போட்டியிட்ட இலங்கை இராணுவ அணி (ஆண்கள்) இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இந்தியப் போட்டியாளர்களுடனான இறுதிப் போட்டியில் விஜயபாகு காலாட்படை படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூஎஸ்எம் பெர்னாண்டோ இரண்டாம் இடத்தைப் வென்றார். அதேபோன்று இலங்கை இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஆர்டி கெப்ரியல் பெண்கள் பிரிவில் பங்களாதேஷ் வீராங்கனைகளுடன் போட்டியிட்டு 3 வது இடத்தை வென்றார்.
மேலும் இலங்கை இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஈபிஎன்எம் குணதாச பங்களாதேஷுடன் போட்டியிட்டு 3 ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.