22nd April 2024 13:48:15 Hours
10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி திட்டத்துடன் இணைந்து 223 பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தை 17 ஏப்ரல் 2024 அன்று பாலிநகர் மற்றும் நட்டான்கண்டால் முகாம் வளாகத்தில் முன்னெடுத்தது.
56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி திட்டத்தின் செயலாளர் வைத்தியர் சர்வேஸ்வரன் அவர்கள் இந்த திட்டத்திற்கு தேவையான அனுசரணையை வழங்கினார். 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி நிகழ்விற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.
இந்நிகழ்வில் 56 வது காலாட் படைப்பிரிவு தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மறுமலர்ச்சி உதவி திட்டத்தின் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.