12th April 2021 17:42:00 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அலகுகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் கடந்த திங்கள்கிழமை (5) தியதலாவை தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் மூலோபாய கொள்கைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நடத்தப்பட்டது.
இந்த செயலமர்வானது இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் ஒருங்கிணைப்பில் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இடம் பெற்றது.
இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் லெப்டின்னட் கேணல் லசித் தாப்ரூ அவர்களால் மூலோபாய மற்றும் கோட்பாடு தொடர்பில் விரிவுரைகளை மேற்கொண்டனர்.
பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் கட்டளை அலகுகளின் கீ்ழ் சேவையாற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.